Wednesday, June 23, 2010

இன்பமாய் வாழ

  1. இன்பங்கள் சோடியாக வருவதில்லை துன்பங்கள் தனித்து வருவதில்லை.
  2. கொடுப்பதை தடுப்பவன் குலம் நாசமடையும்.
  3. காரியம் கடந்தபின் யோசனை சொல்வது அறுவடைக்குப்பின் மழை பெய்தாற்போலாகும்.
  4. பணம் அறிவாளிக்கு தொண்டு செய்கிறது முட்டாளை ஆட்சிசெய்கிறது.
  5. நாம் அதிகம் செய்தால் அதிகம் பெறமுடியும்.
  6. ஒரு மரத்தின் நிழலில் தங்குவதற்கு அதன் கிளைகளை உடைப்பது கொடுமையாகும்.
  7. கொட்டினால்தான் தேள் கொட்டாவிட்டால் புள்ளப்பூச்சி.
  8. மனிதர்கள் நேசமாய் உள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிக்கும்.
  9. நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னை தேடி வரும்.
  10. உள்ளத்தை மற்றவர்களுக்கு கொடு வேண்டியவை தானாகவே சேரும்.
  11. சாக துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும்.
  12. பண்பும் குணமும் ஒன்று பட்டால் மனிதன் அந்தஸ்து உயரும்.
  13. சாகும் வரையில் மனிதன் வாழ்க்கையை கற்கிறான்.

No comments:

Post a Comment